ஆன்மிக களஞ்சியம்
- அந்த சிலை அருகிலேயே ஆழ்வார்கள் சிலையும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது.
- மற்ற நாட்களில் அந்த சிலைகள் தனி அறையில் பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படுகின்றன.
இந்த ஆலயத்தின் கருவறை முன் பகுதி மண்படத்தின் இடது பக்கத்தில் உற்சவர் சிலையை மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
அந்த சிலை அருகிலேயே ஆழ்வார்கள் சிலையும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரின் உற்சவ மேனிகள் அங்கு உள்ளன.
கருடாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், தொண்டர்பொடியாழ்வார் ஆகியோரது சிலைகளும் அங்கு இருக்கின்றன.
முக்கிய திருவிழா நாட்களில் மட்டும் இந்த சிலைகளை அந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து பயன்படுத்துகிறார்கள்.
மற்ற நாட்களில் அந்த சிலைகள் தனி அறையில் பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படுகின்றன.