ஆன்மிக களஞ்சியம்

ஆருத்ரா தரிசனம்

Published On 2024-02-09 12:08 GMT   |   Update On 2024-02-09 12:08 GMT
  • ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது.
  • சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.

மார்கழி மாதத்து பவுர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் "திருவாதிரை" விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதை "ஆருத்ரா தரிசனம்" என்றும் அழைக்கின்றனர்.

ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது.

அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது.

சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.

இந்நட்சத்திர நாளில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம்.

சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில் பொற்சபை உள்ள இடம் சிதம்பரம் ஆகும்.

இதற்கு தில்லை என்றொரு பெயரும் உண்டு.

இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், நடராஜர் என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் தான் தாருகா வனத்து ரிஷிகளின் செருக்கை அடக்க சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார்.

Tags:    

Similar News