ஆன்மிக களஞ்சியம்

9 வாரங்கள் ஊஞ்சல் உற்சவம்

Published On 2023-07-19 06:33 GMT   |   Update On 2023-07-19 06:33 GMT
  • ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு
  • ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகம்

காளிகாம்பாள் திருத்தலத்தில் ஆடி மாதத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் பக்தர்களின் மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவது, அம்பாளுக்கு நடத்தப்படும் `ஊஞ்சல் உற்சவம்' நிகழ்ச்சியாகும். வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.

இந்த நாட்களில் இரவு 7 மணிக்கு உற்சவர் அம்பாளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவார்கள். உற்சவர் அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்தில் இந்த உற்சவம் நடைபெறும். அப்போது சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டு நாம் உற்சவர் அம்பாளை வழிபட்டால், அவள் மனம் மகிழ்ந்து நமது வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றுவாள்.

காளிகாம்பாள் கோவிலில் ஆடிப்பெரு விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.

Tags:    

Similar News