ஆன்மிக களஞ்சியம்
- லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது.
- எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.
சிவம் தனது பார்வையை எண் திசையில் நோக்கியது. எண் திசையிலும் எட்டு லிங்க மூர்த்தங்கள் ஏற்பட்டன.
லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது. லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மம். மத்திய பாகம் மகாவிஷ்ணு. மேற்பரப்பு ருத்திரன்.
இப்படிப்பட்ட லிங்கம் எண் திசையிலும் எண் வகை லிங்கமாக ஊன்றியது.
1. பார்வதி லிங்கம், 2. நவமணி லிங்கம், 3. பைரவி லிங்கம், 4. சிவநிலை லிங்கம், 5. பூரண லிங்கம், 6. சத்தியமாலிங்கம், 7. காரணி லிங்கம், 8. வாரணி லிங்கம்
அன்னை தானே சிவமாகி அருளாட்சி செய்த போது எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.