ஆன்மிக களஞ்சியம்

நாகவழிபாடு செய்யும் முறைகள்

Published On 2023-06-04 12:15 GMT   |   Update On 2023-06-04 12:15 GMT
  • புற்று வழிபாட்டில் பாலும், வாழைப்பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன.
  • சில இடங்களில் புற்றிலிருந்து எடுத்த ஒருவித மையைப் பிரசாதமாகக் தயாரித்து வழங்கும் வழக்கம் உள்ளது.

புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றிப் பால் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

சூடம் ஏற்றி வழிபாடு செய்து புற்றுக்குப் பால் ஊற்றினால் நல்லது நடக்கும். புற்று முழுவதும் மஞ்சளைப் பூசி, அங்கங்கே குங்குமப் பொட்டு வைப்பது தமிழ்நாட்டில் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. சில பெண்கள் புற்றுக்கு முன்பாகப் பொங்கல் இட்டு படைப்பதுண்டு.

தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தித்து மஞ்சள் நிற எலுமிச்சையை புற்றின் மீது வைக்கும் வழக்கம் உள்ளது.

புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

நாக வழிபாடு கீழ்க்கண்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது.

* குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல்.

* மகப்பேறு வேண்டி வழிபடுதல்.

* பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டி வழிபடுதல்.

* கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.

* நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள்.

* தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.

* குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.

நிவேதனம்-பிரசாதம்:

நாக வழிபாட்டிற்கு என நிவேதனப்பொருட்கள் உள்ளன.

நிவேதனம்:

புற்று வழிபாட்டில் பாலும், வாழைப்பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. புற்று வழிபாட்டுக்குரிய காணிக்கைப் பொருட்களைக் கருப்புத்துணியில் வைத்து சந்தனம், பூ இவற்றுடன் சேர்த்துப் பொழுது சாயும் நேரத்தில் புற்றில் செலுத்த வேண்டும்.

பிரசாதங்கள்:

நாகத்தை வழிபாட்டு தெய்வமாகக் கொண்ட நாகர்கோவிலில், கும்பகோணம் சங்கரன்கோவில் உள்பட சில தலங்களில் புற்று மண்ணே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இத்தலங்களில் உள்ள புற்று மண் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கின்றன. இப்புற்று மண் பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.

சில இடங்களில் புற்றிலிருந்து எடுத்த ஒருவித மையைப் பிரசாதமாகக் தயாரித்து வழங்கும் வழக்கம் உள்ளது. இந்த மை பலவித வியாதிகளைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News