ஆன்மிக களஞ்சியம்

ஆணவத்தையும் அசுரர்களையும் ஒரே நேரத்தில் அழித்த சிவபெருமான்

Published On 2024-01-05 12:34 GMT   |   Update On 2024-01-05 12:34 GMT
  • சிவபெருமான், உலகத்தை காப்பதற்காக பல தடவை திருவிளையாடல்களை நடத்தியுள்ளார்.
  • இந்த தலங்களுக்கு அட்ட வீரட்ட தலங்கள் என்று பெயர்.

சிவபெருமான், உலகத்தை காப்பதற்காக பல தடவை திருவிளையாடல்களை நடத்தியுள்ளார்.

பல தடவை தீய சக்திகளுடன் போர் புரிந்துள்ளார்.

அவர் அருள் புரிந்த இந்த இடங்கள் எல்லாம் சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழக மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

அதாவது ஒரு தலத்தில் சிவபெருமான் என்ன செயல் புரிந்தாரோ.... அதற்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அந்த வகையில் சிவபெருமான் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வீரச்செயல்கள் புரிந்த இடமான 8 தலங்கள் குறிப்பிடப்படுகின்றது.

இந்த தலங்களுக்கு அட்ட வீரட்ட தலங்கள் என்று பெயர்.

எண் பெரும் வீரட்ட தலங்கள் என்றும் சொல்வார்கள்.

Tags:    

Similar News