ஆன்மிக களஞ்சியம்
null

மேல்மலையனூர் ஏரியில் பனை மரம் இல்லாத காரணம்

Published On 2023-05-16 11:36 GMT   |   Update On 2023-05-16 11:39 GMT
  • பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்களை உடன் வந்தன.
  • தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்.

சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் நிர்வத்தியாகும் பொருட்டு பார்வதி தேவி மேல்மலையனூருக்கு நடந்து தாழனூரை(தற்போது தாயனூர் என்று அழைக்கப்படுகிறது) வந்தடைந்தாள். இரவு பொழுது நெருங்கியது பார்வதி தேவி தாழனூரில் உள்ள ஒரு வட்ட பாறையில் இரவு பொழுதை கழித்தால். தாழனூரில் தங்கியதால் இன்று தங்கினால் தாயனூர் என்றும் அழைக்கின்றனர். மேலும் பார்வதி தேவி தங்கிய இடத்தில் பார்வதி தேவின் முத்து அங்கு விழுந்ததால் அங்கு முத்தாலம்மன் என பெயர் பெற்று முத்தாலம்மன் ஆலயம் அங்கு வழிபாட்டுக்கு உள்ளது.

பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்கள் உடன் வந்தன. அவர்கள் பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன் இவர்கள் பார்வதி தேவிக்கு காவலாக வந்தனர்.

பார்வதி தேவி மலையனூருக்கு வரும்போது அழகான ஒரு பொன்னேரி அதில் பனந்தோப்பு பனமரத்தில் சானார்கள் கள் இறக்கிக் கொண்டிருந்தனர் அப்போது பார்வதி தேவியின் காவல் தெய்வங்காளான பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன், பார்வதி தேவிடம் தாகமாக இருப்பதாக கூறினர்.

அதற்கு பார்வதி தேவி சரி வாருங்கள் சானர்கள் கள் இறக்கிகொண்டிருக்கிறார்கள் நான் சென்று உங்களுக்கு கள் வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சானர்கள் அருகில் சென்றாள் பார்வதி தேவி....

பார்வதி தேவி சானர்களிடம் என் குழந்தைகளுக்கு தாகமாக இருப்தாகவும் என் குழந்தைக்கு தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்..

கள்ளா கிடையாது.. பொன் பொருள் இருந்தால் கொடு கள் தருகிறோம் இல்லையெனில் நகரு என்று ஏளனம் செய்தனர் சாணர்கள் இதனால் கோபம் அடைந்த பார்வதி தேவி மேல்மலையனூர் ஏரியில் பனை மரம் எதுவும் இருக்ககூடாது என சாபம்மிட்டதால் இன்றும் ஏரியில் பனை மரங்கள் ஏதும் கிடையாது.

Tags:    

Similar News