search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வரதராஜப்பெருமாள் கோவில்-25
    X

    வரதராஜப்பெருமாள் கோவில்-25

    • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • இந்த ஆலயத்தில் நிறைய புராண-வரலாற்று சம்பவங்கள் நடந்துள்ளன.

    1. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    2. இந்த ஆலயத்தில் நிறைய புராண-வரலாற்று சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த சம்பவங்களின் தொகுப்பு பல்வேறு வைணவ தலங்களில் விழாக்களாக மாறி உள்ளன.

    3. இந்த தலத்துக்கு ஸ்ரீ விஷ்ணுசேத்திரம், ஸ்ரீவிஷ்ணு சாலை, ஹரி சேத்திரம், புண்ணியகோடி சேத்திரம், வைகுண்ட சேத்திரம், ஹஸ்தசைலசேத்திரம், திரீஷ்ரோத சேத்திரம், அத்திகிரி, ஹஸ்திகிரி என்று பல்வேறு பெயர்கள் உண்டு.

    4. அர்த்தசாத்திரம் எழுதிய சாணக்கியர். திருக்குறள் எழுதிய பரிமேல்அழகர் ஆகியோர் இந்த தலத்தில் வழிபாடு செய்து அரிய பலன்களை பெற்றார்கள்.

    5. வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம் போக மண்டபம் என்றும், திருப்பதி பூ மண்டபம் என்றும், நாராயணபுரம் ஞான மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. ராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு தியாகம் செய்ததால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் தியாக மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

    6. ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ வித்தையை உபதேசித்தது இந்த தலத்தில்தான். சக்தி பீடங்களில் இந்த ஆலயம் ஸ்ரீ சக்கர பீடம் என்று அழைக்கப்படுகிறது.

    7. முக்தி தரும் ஏழு நகரங்களில் முதன்மையான நகரமாக காஞ்சிபுரம் கருதப்படுகிறது. அதுபோல பஞ்சமூர்த்தி தலங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் பெயர் பெற்றுள்ளது. மற்ற ஆலயங்கள் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக் கேணி, நாராயணபுரம்.

    8. காஞ்சிபுரம் இட்லி என்பது அந்த காலத்திலேயே புராணங் களில் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வந்த மாறனுக்கு இந்த தலத்தில் இட்லி வழங்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

    9. மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார்.

    10. பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார் இத்திருக்கோவிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

    11. தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக் பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில் இது ஆகும்.

    12. திவ்ய தேசங்களுள் கோவில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், திருமாலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும்.

    13. திவ்ய தேசங்கள் வரிசையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம். முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

    14. இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.

    15. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன.

    16. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

    17. மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.

    18. கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

    19. திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    20. வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

    21. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.

    22. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.

    23. பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

    24. ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் 'தங்க மழை' கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.

    25. வரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமறை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன.

    Next Story
    ×