search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    துன்பத்தினின்று விடுபட சத்யநாராயணர் விரத வழிபாடு
    X

    துன்பத்தினின்று விடுபட சத்யநாராயணர் விரத வழிபாடு

    • ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    • சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல்நாள் ஆகும்.

    சத்யநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

    ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

    சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் சூரியனின் ஒளியும், அதன் சக்தியுமே உயிர்ப்பை தருகின்றன.

    இதனால்தான் பழங்காலத்தில் சூரியனையே கடவுளாக நினைத்து மக்கள் அனைவரும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

    சூரியன் நிற்கும் நிலையைக் கொண்டு இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பருவகாலங்கள் ஒரு வருடத்தில் ஏற்படுகின்றன.

    சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல்நாள் ஆகும்.

    இது வசந்த ருது எனவும், இளவேனிற்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    சித்திரை முதல் தினத்தை தமிழக மக்கள் முக்கியமான பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

    அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.

    படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, வாசல் நிலைகளில் மாவிலைத் தோரணங்களை கட்ட வேண்டும்.

    இவ்வாறு செய்தால் திருமகள் விரும்பி வருவாள்.

    கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து குரு, பெற்றோர், பெரியோரை வணங்கி அவர்களின் ஆசி பெற வேண்டும்.

    முடிந்தவரை தான, தருமங்களை செய்ய வேண்டும்.

    புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதை பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.

    பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி நல்ல நேரம் பார்த்து குத்துவிளக்கேற்றி நிறைகுடம் வைத்து வணங்க வேண்டும்.

    பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

    அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்வார்கள்.

    சித்திரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி, குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

    சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு குடிப்பதற்கு மோர் கொடுத்தால் பாவம் விலகும்.

    சர்க்கரை கலந்த பானகம் குடிக்கக் கொடுத்தால், மோட்சம் கிடைக்கும்.

    Next Story
    ×