என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தங்கம் வாங்கலாமா?
- ஆனால் உண்மையில் அட்சய திருதியை தினம் தங்கம் வாங்குவதற்கு உரிய நாள் அல்ல.
- முன்பெல்லாம் அட்சய திருதியை நாளில் யாரும் தங்கம் வாங்கியதே இல்லை.
அட்சயத் திருதியை என்றதுமே நகைக் கடைக்கு போய் தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மனதில் உருவாகியுள்ளது.
அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்பது பெண்கள் மனதில் ஒரு வைராக்கியமாகவே மாறி விட்டது.
ஆனால் உண்மையில் அட்சய திருதியை தினம் தங்கம் வாங்குவதற்கு உரிய நாள் அல்ல.
அன்று கண்டிப்பாக தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
பிறகு ஏன் தங்கம் வாங்கும் பழக்கமும், மோகமும் ஏற்பட்டது என்று கேட்கலாம்.
தங்கம் என்ற பொன், லட்சுமியைக் குறிக்கும். எனவே லட்சுமி வழிபாட்டில் தங்கத்தை வைத்து பிரார்த்தனை செய்தால், அது அட்சயமாக வளர்ந்து செல்வ செழிப்பைத் தரும் என்று கூறப்படுவதன் பேரில் தங்கம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
முன்பெல்லாம் அட்சய திருதியை நாளில் யாரும் தங்கம் வாங்கியதே இல்லை.
அதற்கு மாறாக தங்கத்தை தானம் செய்தார்கள்.
அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை அவசியம் தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான காரணமும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதாவது தங்கம் என்பது ஒரு உயிருக்கு பிரதிநிதியாக, சம அந்தஸ்து கொண்டது.
நமது உயிரை மற்றவருக்கு தானமாக தர இயலாது என்பதால் உயிருக்கு சமமான தங்கத்தை தானம் செய்வதால் நம்மையே தானம் செய்த உயர்வும், பலனும் கிடைக்கும்.
ஏழைகளுக்கு தங்கம் கொடுத்தால் அளவிடற்கரிய பலன்கள் வந்து சேரும்.
அது முடியாதபட்சத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, மகன், மகள் போன்ற உறவினர்களுக்காவது தங்கம் தானம் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






