search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்த கதை
    X

    சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்த கதை

    • காமன் சிருஷ்டி தொழிலுக்கு ஆக்கபூர்வமாக உதவுபவன்.
    • இவனது தேவி ரதியாவாள்.

    காமன் சிருஷ்டி தொழிலுக்கு ஆக்கபூர்வமாக உதவுபவன்.

    இவனது தேவி ரதியாவாள்.

    காமன் ரதியைப் பிரிந்து வந்து, சண்முக அவதாரம் ஏற்படுவதற்காக தட்சிணாமூர்த்தி சொரூபமாக நின்ற பரமேஸ்வரன் மீது

    மலர் அம்புகளை ஏவ, அவரது கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக் கண்ணில் இருந்து கிளம்பிய அக்னியால் சாம்பலானான்.

    இதுவே காமதகனம் எனப்படுகிறது.

    காமதகனம் நடந்ததை கேள்விப்பட்டு ரதி பதறி ஓடி வந்து சிவபெருமானை வணங்கி வேண்ட,

    காமன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டான்.

    ரதியின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் சக்தியை பெற்றான்.

    காமதகனம் நடைபெற்ற இடம், தமிழ்நாட்டிலுள்ள திருக்குறுங்கை.

    இந்த ஊரில் உள்ள குளத்தின் அடிப்பகுதி சாம்பல் மயமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    மன்மதன் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்த நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.

    காமதகனத்தன்று மன்மதன், ரதி தம்பதிகளை வழிபடுவோர் சிவபெருமானின் பரிபூரண அனுக்கிரகத்தை அடைவர்.

    Next Story
    ×