என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவனாக சக்தியும் சக்தியாக சிவனும்
    X

    சிவனாக சக்தியும் சக்தியாக சிவனும்

    • சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.
    • பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

    சிவன் வடிவில் அம்பாள்; அம்பாள் வடிவில் சிவன்: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார்.

    இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்" உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார்.

    அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள்.

    சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார்.

    ஆனால், அம்பிகை சிவனிடம், "நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!" என்றாள்.

    சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.

    சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.

    பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

    இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர்.

    பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

    Next Story
    ×