search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சனி ஓரை நேரத்தில் வழிபடலாம்
    X

    சனி ஓரை நேரத்தில் வழிபடலாம்

    • திருநள்ளாறு தலமானது ஸ்ரீ சனிபகவானுக்கு மட்டுமே உரிய கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.
    • நல்ல யோகத்தை, நீண்ட ஆயுளையும் வெற்றியையும் மன நிம்மதியையும் கொடுக்கும்.

    திருநள்ளாறு தலமானது ஸ்ரீ சனிபகவானுக்கு மட்டுமே உரிய கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.

    ஸ்ரீ சொர்ண கணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீபிராணாம்பிகை பின்னர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் மற்றும் முக்கிய சன்னதிகளைக் கொண்டவை ஆகும்.

    இந்த மூர்த்திகள் தனிச்சிறப்பும் புராதன பெருமையும் அருணகிரிநாதராலும் நால்வராலும் பாடல் பெற்றவையாகும்.

    பக்தர்கள் திருநள்ளாருக்கு சனிக்கிழமையில்தான் செல்ல வேண்டும் என்பதும், பூஜைகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் மட்டும் செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தி தவறாக வழிக்காட்டுகின்றனர்.

    பக்தர்கள் இதை மனதில் வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்து இருந்து சில நிமிடம் மட்டுமே ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகின்றது.

    மேலும் அபிஷேகம் போன்றவற்றை சிறிய இடத்தில் நின்று சிரமப்பட்டு தரிசிக்கின்றனர்.

    ஆனால் சனிபகவானை வாரத்தின் அனைத்து நாட்களிலும் தரிசனம் செய்து பூர்ண அனுக்கிரகத்தை பெற முடியும்.

    புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்யும் பக்தர்கள் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும்.

    அது மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் சனி ஹோரை என்று சொல்லப்படும் நேரம் 1 மணி நேரம் உள்ளது.

    ராகு ஹோரை காலத்தில் ராகுவை வழிபடுவது நல்லதை கொடுக்கும்.

    அதே போல் சனிஹோரையில் தரிசனம், பூஜைகள் செய்வது நல்ல யோகத்தை, நீண்ட ஆயுளையும் வெற்றியையும் மன நிம்மதியையும் கொடுக்கும்.

    Next Story
    ×