search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சடாரி தத்துவம்
    X

    சடாரி தத்துவம்

    • வைணவத்தலங்களில் வழிபாடு முடிந்ததும் தீர்த்தம் பெற்று, துளசி பெற்று சடாரி ஆசியோடு திரும்ப வேண்டும்.
    • தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபான் அருளினாலே என்பர்.

    வைணவத்தலங்களில் வழிபாடு முடிந்ததும் தீர்த்தம் பெற்று, துளசி பெற்று சடாரி ஆசியோடு திரும்ப வேண்டும்.

    அப்போதுதான் திருக்கோவில் வழிபாடு நிறைவடைகிறது.

    பாதுகையாகிய சடாரியைச் சடகோபராகக் கொள்ளும் மரபும் உண்டு.

    சடகோபன் என்ற சடாரி மூலமேதான் திருமகள் கேழ்வனான பகவான் திருவடிகளில் நம் தலையைச் சமர்ப்பிப்பது சாத்யம் என்பர்.

    சடத்துக்கு அஞ்ஞானத்துக்கு பகை என்ற பொருளிலேயே சடாரி என ஆழ்வாரை வழங்குவர்.

    தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபான் அருளினாலே என்பர்.

    அதாவது இறைவனது பாதார விந்தம், நம்மிடமுள்ள காமம், கோபம் போன்ற தீய குணங்களுக்கு எதிராக நின்று நம்மை உய்விக்க வல்லது.

    Next Story
    ×