search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    புடவை கட்டும் அர்ச்சகர்
    X

    புடவை கட்டும் அர்ச்சகர்

    • சாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்து விட்டு அம்மாள் சன்னதி திரும்புவார்.
    • இந்த பூஜையை அம்பாளே நேரில் வந்து செய்வதாக ஐதீகம்.

    அகிலாண்டேஸ்வரி இத்தலத்தல் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்.

    எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை கிரீடம் மற்றும் மாலை அணிந்து

    கையில் தீர்த்தத்துடன் மேள தாளம் முழங்க சிவன் சின்னதிக்கு செல்வார்.

    சாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்து விட்டு அம்மாள் சன்னதி திரும்புவார்.

    இந்த பூஜையை அம்பாளே நேரில் வந்து செய்வதாக ஐதீகம்.

    இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

    இன்றும் உச்சிகாலத்தில் அகிலாண்டேசுவரி கோவில் குருக்கள் அம்மனைபோல் வேடம் தரித்துக்கொண்டு

    சுவாமி கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து விட்டு செல்கின்றார்.

    Next Story
    ×