ஓய்வில்லாமல் தரிசனம் தரும் ரங்கநாதர்

“முத்தங்கி சேவை” என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார்.
ஓய்வில்லாமல் தரிசனம் தரும் ரங்கநாதர்
Published on

அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறார் பெருமான்.

மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார்.

எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார்.

அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார்.

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார்.

"முத்தங்கி சேவை" என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை "பூலோக வைகுண்டம்" என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com