என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மூகாம்பிகை பெயர் வந்த விதம்
    X

    மூகாம்பிகை பெயர் வந்த விதம்

    • அளவில் பெரிதாக அமைந்த இடப்பாகமே சக்தி பாகம் என்று போற்றப்படுகிறது. சிறிதான வலப்பாகமே சிவபாகமாகும்.
    • அந்த ஜோதிர்லிங்கத்தை அதனுள் ஓடும் சொர்ண ரேகை இரு பாகங்களாகப் பிரிகின்றன.

    மூகன் எனும் கம்ஹாசூரன் ஆதிசக்தியினால் அழிந்த போது தன் ஆணவத்திற்கு வருந்தி மன்னிப்பு கோரினான்.

    மேலும் அம்பாள் பெயருடன் தன் பெயரும் இணைந்து வழங்க அருள் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான்.

    அவனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள்

    அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள்.

    அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.

    அதன்பின் அன்னையானவள் தனது அனைத்து சக்திகளையும் அங்கே கோலமகரிஷி கண்டெடுத்து

    வணங்கி வந்த அந்த அற்புத ஜோதிர்லிங்கத்தை மகா வரப்பிரசாத பீடமாக்கிக் கொண்டு அருள்புரிந்து வரலானாள்.

    அன்று அகிலாண்டீஸ்வரி தன் உச்சித சக்தியுடன் கலந்து விட்ட ஜோதிர் லிங்கம்தான் யுக யுகாந்திரங்களைக்

    கடந்து இன்று வீரிய தீட்சண்யத்துடன் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை சன்னதியில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

    அந்த ஜோதிர்லிங்கத்தை அதனுள் ஓடும் சொர்ண ரேகை இரு பாகங்களாகப் பிரிகின்றன.

    அளவில் பெரிதாக அமைந்த இடப்பாகமே சக்தி பாகம் என்று போற்றப்படுகிறது.

    சிறிதான வலப்பாகமே சிவபாகமாகும்.

    இதனால் கொல்லூர் மூகாம்பிகை தலம் சக்தியும், சிவனும் ஒன்றாக சேர்ந்து தரிசனம் தரும் அர்த்தநாரி பீடமாகக் கருதப்படுகிறது.

    இது தனி சக்தி பீடங்களில் சிறப்பானது.

    ஏனெனில் மற்ற சக்தி பீடங்களில் தேவி மட்டுமே அருளாட்சி புரிகிறாள்.

    இங்கு இறைவனும் இறைவியும் அருளாட்சி தருகிறார்கள்.

    Next Story
    ×