search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மாணவியாக விளங்கும் அம்பாள்
    X

    மாணவியாக விளங்கும் அம்பாள்

    • அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகாலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள்.
    • ஆடி வெள்ளியன்று அதிகாலை 2 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

    திருவிழாக்கள்:

    ஆடி வெள்ளி(ஐந்து வெள்ளிகள்) ஆடித் தெப்பம், நவராத்திரி, தைத்தெப்பம், பங்குனி தேர்த்திருவிழா, பஞ்சப்பிரகார திருவிழா.

    ஆடி வெள்ளி திருவிழா

    சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் 'அகிலாண்டேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள்.

    இவளுக்கு ஸ்ரீவித்யா வைதீக முறையில் பூஜை நடக்கிறது. ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம்.

    எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஆடி வெள்ளியன்று அதிகாலை 2 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

    அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகாலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள்.

    சிவனிடம் அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.

    Next Story
    ×