search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கோனியம்மன் தேர் திருவிழா
    X

    கோனியம்மன் தேர் திருவிழா

    • திருக்கோவிலின் பெருந்திருவிழாவான தேர் திருவிழா 14 நாட்கள் சிறப்புற நடைபெறுகின்றது.
    • மாசிமாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டு நடைபெறுகிறது.

    திருக்கோவிலின் பெருந்திருவிழாவான தேர் திருவிழா 14 நாட்கள் சிறப்புற நடைபெறுகின்றது.

    மாசிமாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டு நடைபெறுகிறது.

    மாசி மாதம் 2வது செவ்வாய்க்கிழமை அக்னி சாட்டு அன்று கொடியேற்றப்பட்டு விழா தொடங்குகிறது.

    மாசி மாதம் 3வது செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண உற்சவமும், அதற்கடுத்த 3வது புதன்கிழமையன்று திருத்தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.

    அதையடுத்து இந்திர விமான தெப்பம், மறுநாள் தீர்த்தவாரி கொடியிறக்கம் என்று விழாக்கள் நடந்து, வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு எய்துகின்றது.

    திருவிழாவில் கொடியேற்றத்திற்கு மறுநாள் முதல் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம்,

    காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம், திருத்தேர், குதிரைவாகனம், இந்திர விமானத்தெப்பம்

    ஆகியவற்றில் அருள்மிகு கோனியம்மன் உலாவரும் காட்சி மனதை கொள்ளை கொள்ளும் தன்மை உடையனவாகும்.

    திருவிழாவில் முதல் வெள்ளிக்கிழமையன்று மகளிர் கலந்து கொள்ளும் திருவிளக்கு வழிபாடு சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை நகரமே திரண்டு வந்ததுபோல திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

    தேர்திருவிழாவின்போது ராஜவீதியில் இருக்கும் தேர்நிலை திடலில் இருந்து திருத்தேர் சரியாக மாலை 4 மணிக்கு

    புறப்பட்டு ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுணடர் வீதி வழியாக சென்று

    மீண்டும் தேர் நிலை திடலை வந்து சேரும்.

    கோவையில் நடைபெறும் ஒரே தேர்த்திருவிழா கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவாதலின்,

    கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாது அருகே உள்ள கிராமங்களில் இருந்தும்

    பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அணி திரண்டு விழாக்காண வருவர்.

    தேர்திருவிழாவன்று வாகன போக்குவரத்து வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டு தேரோடும் வீதிகள் தூய்மையுடன் காணப்படும்.

    Next Story
    ×