என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கோனியம்மன் பெயர் காரணம்
- தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர்.
- கோனியம்மனை வணங்குவோர் செல்வங்கள் அனைத்தும் பெறுவர்.
கோனி அம்மன் என்றால் அரசர்களால் வழிபடப்படும் தெய்வம் எனவும் தெய்வங்களுக்கு எல்லாம் அரசி எனவும் பொருள்படும்.
தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர்.
இவ்வாறு கோன் திரியும்போது கோனி எனில் "அரசர்க்கரசி" அல்லது "அரசிக்கரசி" எனவும் பொருள் கொள்ளலாம்.
நன்னூற் சூத்திர வாயிலாக ஆ,மா,கோ,வை வணையவும் பெறுமே.
கோ என்னும் சொல் கோன் என்றாயிற்று.
கோன்-ஆண் பால், கோனி-பெண்பால் ஆதலின் கோனியம்மன் என்றாயிற்று.
கோனியம்மனை வணங்குவோர் செல்வங்கள் அனைத்தும் பெறுவர்.
அவ்வம்மையே ராஜராஜேஸ்வரி எனக்கூறினும் சால பொருந்தும்.
சங்க காலத்து கோசர்கள், மண் கோட்டையிலும், ஊர்க்குடிகளும் படை வீரர்களும் பேட்டையிலும் வசித்தனர்.
இப்போது கோட்டை மேடு என்று வழங்கப்படும் இடம் தான் அக்காலத்தில் மதில்களோடும், அகழிகளோடும் விளங்கியுள்ளது.
இப்போது இருக்கும் ஈசுவரன் கோவிலும், சுப்ரமணியர் ஆலயமும் கோட்டைக்குள்ளும் கோனியம்மன் ஆலயம் கோட்டைக்கு வெளியிலும் அமைந்திருந்தன.
சேரன் செங்குட்டுவன் வடக்கே கற்புடைதேவி கண்ணகிக்கு கற்சிலை கொணர படையெடுத்து சென்றபோது கோவன்புத்தூரும், கோட்டையும் சிதைந்தன.
அதன் விளைவாக கொங்கில் கோசர் ஆட்சியும் மறைந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்