search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருக்கோகர்ண தலத்தில் தினமும்  காமதேனுவின்    அபிஷேகம்
    X

    திருக்கோகர்ண தலத்தில் தினமும் காமதேனுவின் அபிஷேகம்

    • பசுவின் பக்தியை பரிசோதிக்க ஈஸ்வரன் புலிரூபமாக திருவேங்கை வாசல் வந்து சோதிக்கின்றார்.
    • இத்திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

    தேவேந்திரன் சுகர்னம் என்ற சபையில் வீற்றிருக்கையில் காமதேனு தாமதமாக வந்ததால் பூவுலகம் சென்று

    திருக்கோகர்ணத்தில் உள்ள சிவனுக்குத் தொண்டு செய்து பின் தேவலோகம் திரும்பவும் என சாபமும்,

    சாப விமோச்சனமும் செய்து விடுகிறார்.

    காமதேனு திருகோகர்ணம் வந்து சேர்ந்தது.

    பூமியில் கபிலமங்க மகரிஷிகளின் ஆசியுடன் தினமும் காசி சென்று கங்கை நீரை காதினால் கொண்டு வந்து

    ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து மீதி தண்ணீரை பாறையை கீறி அதிலிட்டு பரமசிவன் சாப விமோச்சனம் செய்வாய் என்று காமதேனு வேண்டியது.

    பசுவின் பக்தியை பரிசோதிக்க ஈஸ்வரன் புலிரூபமாக திருவேங்கை வாசல் வந்து சோதிக்கின்றார்.

    பசுவை சாப்பிடுவதாக பயமுறுத்தி பின் அதன் பக்தியை அறிந்து இந்திர சாப விமோச்சனம் செய்து ரிசபாருடராய் வந்து காமதேனுக்கு மோட்சம் அளித்தார்.

    இவ்வளவு சிறப்புடைய திருக்கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் திருத்தலத்திற்கு நாமும் சென்று இறைவனின் பேரருள் பெற்று வருவோம்.

    இத்திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

    Next Story
    ×