என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

அவ்வையார் வணங்கிய ராஜ கணபதி
- இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.
- இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
எமனை எதிர்க்கும் விநாயகர், திருப்பைஞ்லி
திருச்சி மணச்சநல்லூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் இருக்கும் திருப்பைஞ்ஞீலியில் உள்ள எமன் கோவிலின் நுழைவாசலுக்கு முன்பாக உள்ள விநாயகர் தெற்கு திசையை நோக்கிய வண்ணம் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி உதைக்கும் நிலையில் காணப்படுகிறார்.
அதாவது தெற்கு திசையில் உள்ள எமன் இங்கு வந்தால் எதிர்ப்புத் தெரிவிக்க உதைக்கும் நிலையில் இந்த தோற்றம் என்கிறார்கள்.
நோய் நொடியின்றி வாழ இவர் அருள்பாலிக்கிறார்.
ராஜகணபதி, சேலம்
அவ்வையார், பூத உடலோடு திருக்கைலாயத்துக்குச் செல்லும் போது இத்தலத்து ராஜ கணபதியைத்தான் வணங்கிச் சென்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.
இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.
இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
Next Story






