search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பதினாறு வகை சங்குகளில் உயர்ந்தது வலம்புரிச் சங்கு...
    X

    பதினாறு வகை சங்குகளில் உயர்ந்தது வலம்புரிச் சங்கு...

    • தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது.
    • ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் 'பாஞ்சஜன்யம்' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .

    பொதுவாக நமது இறைவழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு. தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது.

    தருமர் வைத்துள்ள சங்கு , 'அனந்த விஜயம்' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, 'தேவதத்தம்' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , 'மகாசங்கம்' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, 'சுகோஷம்' என்றும், சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, 'மணிபுஷ்பகம்' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் 'பாஞ்சஜன்யம்' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .

    சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும்.

    Next Story
    ×