search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆலயத்தில் சிற்பங்கள் வரலாற்றில் பல்லவ கால பிள்ளையார்
    X

    ஆலயத்தில் சிற்பங்கள் வரலாற்றில் பல்லவ கால பிள்ளையார்

    • ஓம் என்பது பிரணவம், இந்த பிரணவமே வேதத்தின் மூலம்.
    • வி+நாயகன் என்றால், வேறு தலைவர் இல்லாதவர் என்பது பொருள்.

    ஓம் என்பது பிரணவம், இந்த பிரணவமே வேதத்தின் மூலம்.

    ஓம் என்ற ஒலியின் வடிவமே பிள்ளையார்.

    பிள்ளையார் ஒப்பாரும் மிக்கவரும் இல்லாதவர்.

    தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்.

    வடமொழியில் இவர் பெயர் விநாயகன்.

    வி+நாயகன் என்றால், வேறு தலைவர் இல்லாதவர் என்பது பொருள்.

    அவர் இவ்வாலயததின் முதற் கடவுளாக எழுந்தருளியிருக்கிறார்.

    கி.பி. 7 நூற்றாண்டு இவருக்கு காசியில் துண்டி வினாயகர் என்ற பெயர்.

    பல்லவர் காலத்து சிற்பம் என்ற பெருமையும் உண்டு.

    இவரைச் சிறப்பாக வழிபடும் நாட்கள், வெள்ளிக்கிழமை, மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தி, ஆவணி சதுர்த்தி, செவ்வாய்க்கிழமை.

    பிரம்மாவிடம் ஓம் என்ற பிரணவத்தின் விளக்கம் கேட்டுத் தெரியாமல் நின்ற படைப்புக் கடவுளை

    அடைத்து விட்டுத் தந்தை சிவபெருமானிடம் நியாயம் எடுத்து உரைத்த முருகப்பெருமான்

    இவ்வாலயத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய பெருமானாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார்.

    இவருக்கு சித்திரை கிருத்திகையில் சிறப்பான விழா நடைபெறுகிறது.

    மற்ற எல்லாக் கிருத்திகை தோறும் வழிபாடு மெய்யன்பர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×