search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரூப்-4 தேர்வு - மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை -அரசு பணியாளர் தேர்வாணையம்
    X

    குரூப்-4 தேர்வு - மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை -அரசு பணியாளர் தேர்வாணையம்

    குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குரூப்-4 ல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் வருகிற 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த தெரிவுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்படிருந்தது.

    தற்போது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லை எனில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தினையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #TNPSC
    Next Story
    ×