search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மலேசியாவில் ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா
    X

    மலேசியாவில் ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா

    சென்னை 600028 இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    யுவன்ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் உருவாகி இருக்கும் 'பாய்ஸ் ஆர் பேக்' மற்றும் 'சொப்பன சுந்தரி' பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை மேலும் பிரம்மாண்ட முறையில் மெருகேற்றும் விதமாக, வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி, யுவன்ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களின் படக்குழுவினருடன் இணைந்து, மலேசியாவில் இசை மற்றும் டிரைலரை விமர்சையாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருக்கும் பிரம்மாண்ட அரங்கத்தில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவிருக்கின்றனர். மலேசியாவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடுவது குறித்து வெங்கட் பிரபு கூறும்போது, ‘‘தமிழ் திரைப்படங்களின் சொர்க்க வாசலாக கருதப்படும் ஒரு நாடு மலேசியா. ஒவ்வொரு படங்களையும் திருவிழாவாக கொண்டாடும் மலேசியா ரசிகர்கள்தான் அந்த சொர்க்க வாசலின் வலுவான தூண்கள். அத்தகைய அற்புதமான ரசிகர்கள் மத்தியில் எங்களின் ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறோம்.

    யுவன்ஷங்கர் ராஜா மீது மலேசிய ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை மனதில் கொண்டு, அங்கே எங்களின் இசை மற்றும் டிரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார். இப்படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த எல்லா நடிகர்களும் நடிக்கிறார்கள். மேலும், மஹத், வைபவ் உள்ளிட்ட சிலரும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இப்படத்தை வெங்கட் பிரபு ‘பிளாக் டிக்கெட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். 
    Next Story
    ×