என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள்"
- பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் முயற்சியில் மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி இருந்தனர்.
- அப்பா வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக வாக்காளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியது அனைவரும் நெகிழ வைத்திருக்கிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் முயற்சியில் மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி இருந்தனர். வருகிற 19-ந் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்த கடிதம் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த கடிதத்தில் மாணவ, மாணவிகள் எழுதியிருப்பதாவது:-
உங்கள் மகன், மகள் எழுதும் கடிதம். நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் அம்மா, அக்கா, அண்ணன், தம்பி எல்லோரும் நலமா? அப்பா வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த வாக்குப்பதிவில் தாங்கள் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவதோடு, இத்தகவலை அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அக்கா, அண்ணன் உள்ளிட்டவர்களுக்கு தெரிவியுங்கள். அருகில் வசிக்கும் நமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி தவறாமல் வாக்களிக்களித்து எங்களுக்கு வழிகாட்டிட தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!
இத்துடன் 19-ந் தேதி வாக்களித்த விரலின் அடையாள மையுடன் வீடு திரும்பும் அப்பா அம்மாவை வரவேற்க காத்திருக்கும் உங்களின் அன்பு மகன்/மகள்
ஜனநாயக கடமையாற்ற இருக்கும் தங்களின் மகன், மகள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்படி எழுதி இருந்த கடிதங்களை பின்பு மாணவ-மாணவிகள் அதே பகுதியில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று கடிதங்களை தங்களின் பெற்றோரின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் ஆணையம் தாண்டி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செய்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார்.
- அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்து தூங்கியதாகவும், மாணவர்கள் ஏதாவது சந்தேகம் கேட்டால் அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆசிரியரின் இந்த நடத்தையால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியரை தாக்க தொடங்கினர். உடனே அந்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போதும் அவரை மாணவர்கள் துரத்தி சென்று அவர் மீது செருப்புகளை வீசி தாக்கி உள்ளனர்.
அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 22 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
In Bastar, kids took matters into their own hands when a teacher showed up drunk to school. Instead of teaching, he abused them. Fed up, the children chased him away by throwing shoes and slippers. The incident, caught on video, has sparked outrage on social media. pic.twitter.com/oMnQCMjVNQ
— Sneha Mordani (@snehamordani) March 26, 2024
- காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போல் இலங்கையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
ஆரோக்கியமான சுறு சுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அளிக்கப்படும் காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை படிக்கும் 9 ஆயிரத்து 134 பள்ளிகளில் 16 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைவர்.
இந்தத் திட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொடங்கி வைத்தார். அவர் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினார். மாணவர்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாடு களை நிவர்த்தி செய்யவும், தினசரி வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்கவும், கல்வியில் செயல் திறனை உயர்த்தவும் பள்ளி உணவுத் திட்டம் பயன்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.
- பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது.
பெருந்துறை:
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வேளாண்மை மாணவர்கள் பள்ளி நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு முடிந்ததும், ஏதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பில் விவசாய பாடத்தை விருப்பப்பாடமாக படித்த மாணவர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.
விழாவிற்கான மரக்கன்றுகளை பெருந்துறை ரோட்டரி கிளப் வழங்கியது. இவ்வாறு மரங்களை நடுவது மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைகிறது.
பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை வேளாண் ஆசிரியர் கந்தன் செய்திருந்தார்.
- மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
- பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.
ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.
- மாணவர்கள் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
- விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹர்னி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 14 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இறந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
- பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர்.
திருவனந்தபுரம்:
2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. புதிதாக பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
புத்தாண்டு வாழ்த்துக்களை பெரும்பாலானோர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது சமீபகால வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் தற்போதே தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள், அம்மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை தாங்களே தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு களவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்தனர்.
அதன்படி அந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். மாணவ-மாணவிகளின் அந்த படைப்புகள் கைவி னைப் பொருட்கள், ஓவியங்கள் என பல விதங்களில் இருந்தன.
மாணவ-மாணவிகள் தங்களின் படைப்புகளை தபால் சேவை மூலம் கல்வித்துறை மந்திரியின் அலுவலகத்திற்கு அனுப்பி அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
- திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.
திருவனந்தபுரம்:
பள்ளி நட்பு என்பது அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாததாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் சிறிய உதவிகளை செய்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால் மாணவியின் பெற்றோர் வாங்கிய கடனை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அடைத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் அவர்களது வீடு ஏலம் போவதை தடுத்துள்ளனர். கேரளாவில் நடந்த அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் பெற்றோர் வங்கி ஒன்றில், வீட்டுக்கடன் வாங்கியிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் அவர்களது வீடு ஏலத்துக்கு வந்தது. கடன் தொகை கட்ட முடியாததால் மாணவியின் வீடு ஏலத்துக்கு வருவதை, மாணவியின் உடன்படிக்கும் மற்ற மாணவர்கள் அறிந்தனர். அவர்கள் அந்த மாணவிக்கு உதவ முடிவு செய்தனர்.
மாணவியின் பெற்றோர் வங்கிக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 728 செலுத்த வேண்டும். அதனை நன்கொடை மூலம் வசூலிக்க மாணவர்கள் முடிவு செய்தனர். அது பற்றி தங்களது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதனால் அந்த மாணவியின் குடும்பத்துக்கு உதவ அனைவரும் முன் வந்தனர்.
இதற்காக மாணவி படிக்கும் பள்ளியில் பொது இடத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டது. அதில் மாணவர்கள் தங்களின் பங்குக்கு பணம் செலுத்தினார்கள். மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.
மாணவர்கள் மொத்தம் ரூ.1.70 லட்சம் கொடுத்தார்கள். அது மட்டுமின்றி ஆசிரியர்கள் ரூ.1.28 லட்சம் நிதி திரட்டினார்கள். மொத்தத்தில் ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் நிதி வசூலிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் வங்கிக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 59 ஆயிரத்து 728 ரூபாயை, வீடு ஏலத்துக்கு வரும் 2 நாட்களுக்கு முன்னதாகவே கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் மாணவியின் வீடு ஏலத்துக்கு வரவில்லை. மேலும் வங்கிக்கு செலுத்தியது போக மீதியிருந்த பணம், மாணவியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உடன் படிக்கும் மாணவர்களின் இந்த செயல், மாணவியின் பெற்றோரை நெகிழ்ச்சியடைய செய்தது. அவர்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மாணவர்களின் இந்த செயலுக்கு, அவர்கள் படித்த பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் என பலரும் உறுதுணையாக இருந்தனர் .
- பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
- மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா எலவள்ளி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு பாரதம்மா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வார்டனாக மஞ்சுநாத் என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா மற்றும் வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் மாணவ-மாணவிகளை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தலைமை ஆசிரியை பாரதம்மா அந்த பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) சில மாணவர்களை கட்டாயப்படுத்தி வைத்து சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை வைத்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதம்மா, வார்டன் மஞ்சுநாத், சமூக அறிவியல் ஆசிரியர் அபிஷேக், ஓவிய ஆசிரியர் முனியப்பா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் மரேஷ், ஒப்பந்த பணியாளர் கலாவதி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தாலுகா சமூக நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மஸ்தி போலீசார் கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
- அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் செல்லும் சாலை பழுதடைந்து சேதம் அடைந்துள்ளது. இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதே போல் வனப்பகுதியில் சுற்றி அகழிகள் அமைக்காமல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், இது குறித்து வனத்துறையினரிடம் கூறினால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தியும், இதே போல் மலைப்பகுதியில் தொலை தொடர்பு சேவை இல்லாததால் அவசரகால உதவிக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இங்கு உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை ஆசனூர் ஆரேப்பாளையம் பிரிவு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலை கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் வாகனங்கள் 2 புறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம், வட்டாட்சியர் ரவிசங்கர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தி
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இதில் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி - மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பச்சூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் பச்சூர் ரெயில்வே மேம்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.
மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் ஆபத்தான முறையில் ரெயில் தண்ட வாளத்தை கடந்து செல்லும் சுழல் உள்ளது.
சில சமயங்களில் மாண வர்கள் சைக்கிள்களுடன் தண்டவாளத்தை கடக்கும் போது திடீரென ரெயில் வந்துவிடுகிறது. இதனால் மாணவர்கள் பயத்துடனே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
அதேபோல் பச்சூரில் ரெயில் நீண்ட நேரம் நிற்பதால், ரெயில் பெட்டிகளுக்கு இடையே உள்ள கப்ளிங் மீது ஏறியும், பெட்டிகளின் அடியில் புகுந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் சிரமமின்றி தண்ட வாளத்தை கடந்து செல்ல மாற்று பாதை பாதை அமைத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதியதாக கட்டப்பட்ட வரும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம்.
- தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வண்டலூர்:
மறைமலை நகர் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது, இதைத தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்ற வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறும்போது, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம். டெங்கு கொசு உற்பத்தியாகும் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்களுக்கு அபராத விதிக்கப்டுகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்