என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடிகர்"
- வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.
- இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.
'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.
இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.
சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். அப்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள விக்ரமன் மகனுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
- ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.
இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18 கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.
நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.
- விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
- நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" 2 படங்களும் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.
தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான 'கில்லி' படம் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து, மே 1 - ந்தேதி அஜித்தின் பிறந்தநாளை யொட்டி "பில்லா" ,மற்றும் "தீனா" ஆகிய படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட் உள்ளன.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2012 -ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய 2 படங்களும் விரைவில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதன் படப்பிடிப்பு மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
- கிராமத்துக் கதையில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.தற்போது மதுரையை அடுத்த மேலூர் கல்லம்பட்டி கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு 10 நாட்களுக்கு இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படம் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கிராமத்துக் கதையில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார்.
- இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த வாரம் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த டீசரில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். இப்படம் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் 3 வேடத்தில் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார்.
- 'பிளாஷ்பேக்' -ல் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது
நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசு' அளித்தது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் நேற்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு வெளியிட்டது.
இந்த 'டீசர்' இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து 'சித்தா' படம் புகழ் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சியான்-62 புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.
இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் 'டைட்டில்' விக்ரம் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய படத்துக்கு 'வீர தீர சூரன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டீஸரும் வெளியிடப்பட்டது. அவர் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். ' வீர தீர சூரன் ' ஒரு அதிரடி திரைப்படமாக விரைவில் உருவாக உள்ளது.
இப்படத்தில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதுதவிர மேலும் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தில் விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார். 'பிளாஷ்பேக்' போர்ஷனில் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது
- தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது
நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்தது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் இன்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் அவரது பிறந்த நாளை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு இன்று வெளியிட்டது.
இந்த 'டீசர்' இணைய தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.
இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.
:தங்கலான்' படத்திற்காக விக்ரமுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் இப்படத்தில் கடினமாக விக்ரம் உழைத்துள்ளார். படம் ரிலீசுக்கு பின் விக்ரமுக்கு பாராட்டு, மற்றும் விருதுகள் குவியும் என ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'பிளாஷ்பேக்' போர்ஷனில் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார்
- இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.
தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து வருகிறார் . 'சேது' படம் மூலம் புகழ் பெற்ற அவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் 'தில்', தூள், சாமி, அந்நியன் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன.
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில், 'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இதில் விக்ரம் தாடியுடன் கூடிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது. இதுதவிர மேலும் ஒரு தோற்றத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் 'பிளாஷ்பேக்' போர்ஷனில் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த புதிய படத்தில் கதாநாயகனாக பிரதீப் நடிக்க உள்ளார்.
- விரைவில் இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகளில் இயக்குனர் அஸ்வத் ஈடுபட்டு உள்ளார்.
2019 - ம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவை படம் 'கோமாளி'. வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் இதனை தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் இதில் நடித்தனர்.
இந்தப்படத்தை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ஹிட்டானது.
இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப்ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க பிரதீப் 'கமிட்' ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த புதிய படத்தில் கதாநாயகனாக பிரதீப் நடிக்க உள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகளில் இயக்குனர் அஸ்வத் ஈடுபட்டு உள்ளார்.
'ஓ மை கடவுளே' படம் 2020 -ம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவை படமாகும். இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கினார்.
இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் திரையரங்குகளில் 2020 பிப்ரவரி14 -ந்தேதி காதலர் தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் தற்போது தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு.
- அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளலாம்.
பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த 'சுக்ரன்' படம் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.
இதையடுத்து டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் போன்ற படத்தில் 'ஹிட்' பாடல்களை கொடுத்ததன் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானார்.
அதன்பின் விஜய் ஆண்டனி திடீரென சினிமாவில் ஹீரோவானார். இதையடுத்து இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார். தற்போது கதாநாயகன் விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'.இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படம் வருகிற 11 - ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் ஆண்டனி, ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கோவையில் இன்று நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது விஜய் ஆண்டனி கூறியதாவது :- ரோமியோ' படம்' அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கி உள்ளோம்.
ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படத்தில் தெரிவித்து உள்ளோம்.
பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள்.ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவதில் ஒரு தாய், மனைவி போன்றவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
நடிகர் விஜய் தற்போது தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. மேலும் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன்.தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளலாம்.
ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார்.
- இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி (வயது 27). எல்லோஸ்டோன் ஸ்பின் ஆப் தொடரில் நடித்து பிரபலமானவர். கன்சாஸ் பகுதியில் வசித்து வந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார்.
இந்த நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோல்பிரிங்க்ஸ் மீது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர். அப்போதுதான் கோல்பிரிங்க்ஸ் மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது.
- இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் .
பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில், 'சித்தா' புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட புது படத்தில் நடிகர் விரக்ம் நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சியான் 62' படத்தை இதற்கு முன் 'மும்பைகார்' மற்றும் 'தக்ஸ்' படங்களை தயாரித்த ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் சியான் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க தொடங்குகிறார்.
இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்துக்குஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'சியான் 62' படப்பிடிப்பு குறித்த 'அப்டேட்' பகிர்ந்து உள்ளார்.
அதில் 'சியான் 62' படப்பிடிப்பு தொடர்பாக இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது. இதற்காக நாங்கள் முழு உழைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் 'என கூறி உள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்