search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்தரராஜன்"

    • வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்.
    • பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரெயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரெயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்தாள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

    பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரெயில் வர உள்ளது.

    நடைபெற்று முடிந்த 4 கட்ட தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது.

    எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார்.

    தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்க்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்.

    டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் தி.மு.க.வின் சாதனை. தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

    கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை தி.மு.க. அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் ஆக்க வேண்டும்.

    கருணாநிதி பற்றிய பாடம் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது.தற்போது 8-ம் வகுப்பிலும் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

    பா.ஜ.க. கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது.

    ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும்.

    எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்.

    57 வருடமாக காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தவறிவிட்டதாக இப்போது செல்வ பெருந்தகை கூறுகிறார். தி.மு.க.வின் தோளில் அமர்ந்து கொண்டு காங்கிரசை எப்படி வளர்க்க முடியும்.

    நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனித்து நிற்கிறோம். தி.மு.க.வை விட்டு ஒருபோதும் காங்கிரசால் வெளியே வர முடியாது.

    அரசியலுக்காக தற்போது செல்வ பெருந்தகை இப்படி பேசியுள்ளார். இது ஒரு புறமிருக்க தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என ஈ . வி. கே. எஸ். இளங்கோவன் சொல்கிறார்.

    இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.
    • சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகளவில் பதிவானது. எனினும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஒரு வார காலமாக தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.

    அந்த வகையில், தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பொழிகிறது. இதனிடையே சென்னையில் பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறக்கும் விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

    இதையடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன், பொது மக்களுக்கு குளிர்பானம், பழ வகைகளுடன் சுடச்சுட உணவு வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைத்தோம், என்றாலும் மழை பெய்து வானமே தண்ணீரை கொடுத்துவிட்டது. ஆனாலும், நாங்கள் சூடான சாப்பாடு கொடுக்கிறோம். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருந்தோம்."

    "நாம தண்ணீர் கொடுக்கும் முன், வானமே தண்ணீர் கொடுத்ததில் மகிழ்ச்சி. சூடு தணிப்பதில் அக்கறையுடன் இருக்கிறோம். சூரியன் மறைந்திருக்கிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி. மழை பொழிகிறது. மழை பொழிந்தால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும்," என்று தெரிவித்தார்.

    • பெண்கள் பற்றி தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்போம்.
    • கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 மாநில பட்ஜெட்டுகளுக்கு தேவைப்படும் நிதி வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கானாவில் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார்.

    இந்த நிலையில் கவர்னராக இருந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டாக்டர் தமிழிசை இன்று சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதாக கூறும் நிலையில் நானும் இங்கு வந்துள்ளேன். இந்த ஆட்சி முற்றிலும் தோற்றுவிட்டது.

    சொல்லாட்சியும் இல்லை. செயலாட்சியும் இல்லை. பொய்யாட்சிதான் நடக்கிறது. கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கரை கைது செய்துள்ளார்கள். கஞ்சா கடத்துபவர்களை உங்களுடன்தான் வைத்திருக்கிறீர்கள். அவர்களையும் கைது செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டுமல்லவா?

    பெண்கள் பற்றி தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்போம். அதற்கு தண்டனை வாங்கி கொடுக்க கஞ்சா தேவையில்லை. சட்டம் போதும்.

    2026 தேர்தலை சந்திக்க இவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவேதான் டி.எம்.கே.வை நம்பாமல் பி.கே.வை (பிரசாந்த் கிஷோர்) நம்புகிறார்கள் என்றார். பின்னர் தெலுங்கானா மாநில தேர்தல் பிரசார அனுபவம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஐதராபாத், செகந்திராபாத் மேடக், சசிராயாத் உள்பட 9 தொகுதிகளில் பணியாற்றினேன். பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ அரங்க கூட்டங்கள் மூலம் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தேன்.

    மன கவர்னர் (மக்கள் கவர்னர்) என்று மக்கள் காட்டிய அன்பு நெகிழ வைத்தது. கடந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் 4 எம்.பி.க்கள் வெற்றி பெற்றார்கள். இந்த தேர்தலில் நவரத்தினங்களுக்கு (9-க்கு) குறையாமல் பாராளுமன்றத்துக்கு செல்வார்கள். ஏற்கனவே 4.5 சதவீதமாக இருந்த வாக்குவங்கி இப்போது 14.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. சமீபத்தில் நடந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் 2 தொகுதியில் பா.ஜனதா வென்றுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்கள். பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, முதியவர்களுக்கு ரூ.4 ஆயிரம் பென்ஷன், விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை, ரூ.2 லட்சம் வரை வங்கி கடன் ரத்து என்று அள்ளிவிட்டார்கள்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 மாநில பட்ஜெட்டுகளுக்கு தேவைப்படும் நிதி வேண்டும். எனவே மக்கள் காங்கிரசின் வார்த்தை ஜாலங்களை புரிந்து கொண்டார்கள். எனவே தெலுங்கானாவும் பிரதமர் மோடியின் குடும்பமாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு நேரடி போட்டி உள்ளது.
    • வருகிற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வாக்களிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆந்திரா, தெலுங்கானாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் மதத்தின் பெயரால் சாதியின் அடிப்படையில் மக்களை உணர்வு பூர்வமாக பிளவு படுத்தி வருகிறது.

    தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சியுடனும், சில இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு நேரடி போட்டி உள்ளது.

    மத்திய அரசின் திட்டங்களால் தெலுங்கானா அதிக பலன் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின்வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.

    தெலுங்கானா மாநிலத்திற்கு இதுவரை 22 முறை வந்துள்ளார்.

    அமைச்சர்கள் ஜி கிஷன் ரெட்டி, ஈடல ராஜேந்தர் ஆகியோர் ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவை புறக்கணிக்கின்றனர். முறையற்ற திட்டங்கள், வளர்ச்சி நிதி பற்றாக்குறை மற்றும் அடுக்கடுக்கான ஊழலால் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது.

    வருகிற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வாக்களிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி தலைமை உத்தரவின் படி 2 தொகுதிகளிலும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
    • ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

    தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் தொகுதிகளின் முக்கிய பொறுப்பாளராக தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ.க. நியமித்துள்ளது.

    தேர்தல் முடியும் வரை அவர் ஐதராபாத்தில் தங்கி இருப்பார் என தெரிவித்துள்ளனர். கட்சி தலைமை உத்தரவின் படி 2 தொகுதிகளிலும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    அவர் மாநிலம் முழுவதும் உள்ள 17 தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். ஆனாலும் இந்த 3 தொகுதிகளில் உள்ள தேர்தல் பணிகளையும் சேர்த்து அவர் கவனிக்கிறார்.

    ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மாதவி லதா என்ற சமூக ஆர்வலர் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பொறுப்பாளராக தமிழிசை நியமிக்கப்பட்டதன் மூலம் 2 சக்தி வாய்ந்த பெண்களை ஒவைசி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இது ஒவைசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    நேற்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்:-

    நம்மிடம் வலிமையான பிரதமர் உள்ளார். இந்தியாவிற்கே திறமையான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    நான் கவர்னராக இருந்தாலும் சாதாரண பா.ஜ.க. நிர்வாகியாக இருந்தாலும் இந்த மாநில மக்களுடைய தொடர்பை புறக்கணிக்க முடியாது. அதனால்தான் கட்சி தலைமை உத்தரவிட்ட உடனே பிரசாரத்திற்கு வந்தேன் என்றார்.

    • கட்சி மேலிட உத்தரவின் பேரில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
    • ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பணியாற்றி வந்தார்.

    அரசு திட்டங்கள் மற்றும் மக்களை நேரடியாக சந்திப்பதில் அவர் தீவிரம் கவனம் செலுத்தினார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலுங்கானாவில் செல்வாக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கட்சி மேலிட உத்தரவின் பேரில் அவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகை ஜெயப்பிரதா ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என நேற்று தெரிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருவதால் அங்குள்ள பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது.
    • நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...

    சென்னை:

    'தூர்தர்ஷன்' இலச்சினை காவிநிறமாக மாற்றப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னான் கவர்னரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

    அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் மு.க.ஸ்டாலின் அவர்களே...

    ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது.

    எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்?

     DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள்.

    காவி என்பது தியாகத்தின் வண்ணம்....

    நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...

    அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே...

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
    • வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும்.

    சென்னை:

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அமீத்தை சந்தித்தார்.

    அப்போது மயிலாப்பூர் 122-வது வட்டம் 13-வது வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு கொடுத்தார்.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். நேர்மையானவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ அப்போதெல்லாம் மாற்றுப் பாதையை தேர்வு செய்வதுதான் வாடிக்கை.

    நேற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 122-வது வார்டில் ஆஸ்டின் நகரில் அமைக்கப்பட்டிருந்த 13-வது வாக்குச்சாவடியில் மாலை 5.30 மணியளவில் பிரபு, அருண் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து பா.ஜனதா பூத் ஏஜெண்டு கோவிந்தன் உள்ளிட்டோரை அடித்து வெளியே விரட்டி விட்டு பூத்தை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுள்ளார்கள்.

    இதே கும்பல் பூத் எண். 14, 15, 16 ஆகியவற்றிலும் காலையில் இருந்தே கள்ள ஓட்டுகளை பதிவு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் தலைமை தேர்தல் ஏஜெண்டு கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

    எனவே இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்.

    சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தி.நகரில் வார்டு எண்கள் 199, 200, 201, 202-ல் ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    தி.மு.க.வினர் செய்த தவறுகளை மறைப்பதற்காக பா.ஜனதாவினர் தோல்வி பயத்தில் புகார் கூறுவதாகவும், பா.ஜனதாவினர் பெயர்களை நீக்கி விட்டதாக கூறுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியென்றால் திட்டமிட்டுதான் பா.ஜனதாவினர் பெயர்கள் நீக்கப்பட்டது என்று தி.மு.க. ஒத்துக்கொள்கிறதா?

    கணவருக்கும், மனைவிக்கும் வெவ்வேறு இடங்களில் ஓட்டு இருப்பது, ஒரே குடும்பத்தில் சிலருக்கு ஓட்டு இல்லாமல் இருப்பது, இப்படி சில குறைபாடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைவு என்பது கவலை அளிக்கும் விசயம்.

    வாக்கு வலிமையானது. அதை செலுத்த முடியாமல் போவது அதிக வலியை தரும். வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும். இது பலருக்கு தெரியவில்லை. தேர்தல் விழிப்புணர்வுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை.

    சென்னையில் 69 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்ததாக நேற்று இரவு தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று 10 சத வீதத்துக்கும் மேல் குறைத்து தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சதவீத முரண்பாடு தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையின் மையை ஏற்படுத்தி விடும்.

    எப்படியோ மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை இவ்வளவு பெரிய மாநிலத்தில் சுமூகமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். பாரதிய ஜனதா சார்பில் உதவி தேர்தல் அலுவலர் கீதா லட்சுமியிடம் அளிக்கப்பட்ட புகாரில் பா.ஜனதா முகவர் கவுதமை தாக்கிய தி.மு.க. பிரமுகர்களான பிரபு, அருண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தி.மு.க. முகவரான கிருஷ்ணவேணி தேனாம்பேட்டை போலீசில் அளித்த புகாரில், பாரதிய ஜனதா கட்சி முகவர்களை கவுதம், கிருஷ்ணன் ஆகியோர் சாதியை பற்றி குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.
    • மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்.

    சென்னை:

    தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டார்.

    அக்கா 1825 (365x5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை சவுந்தரராஜனின் தென் சென்னை உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.

    * தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்.

    * மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்

    * தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம்

    * பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால் பிரச்சனை.

    * பிரச்சனைகளை தீர்த்து மீனவர்களின் அடிப்படை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

    * 6 சட்டசபை தொகுதிகளிலும் 6 அலுவலகங்கள் திறக்கப்படும்.

    * மீனவர்களுக்கான ஆலோசனைக்குழு போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் கூறினார்.

    • தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது
    • பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார்.

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தென்சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் தான் இன்று பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார். இந்த மீட்டிங்கின் போது ஆபாசமான படங்களை சிலர் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மீட்டிங் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் வருத்தமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று ஜூம் மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை ஜூம் மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

    • கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார்.
    • இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது.

    தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

    இன்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யை ஆதரித்து திருவான்மியூரில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு மாநில கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த தொகுதியில் (தென்சென்னை) போட்டியிடுகிறார். அந்த கட்சியில் (பா.ஜனதா) வேட்பாளர்கள் இல்லை. ஆகேவே இரண்டு மாநில கவர்னர்களை ராஜினாமா செய்ய வைத்து, தேர்தல் களத்தில் பா.ஜனதா களம் இறக்கிவிட்டுள்ளது.

    கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார். இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது. கச்சத்தீவு பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒருபோதும் பேசியது கிடையாது. தேர்தல் நெருங்கிய நிலையில், அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள்" என்றார்.

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:-

    தயது செய்து உங்களுடைய எம்.பி. பதவியின்போது செய்த சாதனைகள் சொல்லுங்கள் என கனிமொழியிடம் கேட்க விரும்புகிறேன். நான் ஆளுநராக நீடிப்பதா? அல்லது வேட்பாளராக போட்டியிடுவதா? என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள்.

    அவர்களுக்கு (திமுக) தேர்தலில் போட்டியிடக்கூடிய கட்சிக்காரர்கள் இல்லையா?. அவர்களுடைய சொந்த உறவினர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியுள்ளனர். எங்களுடைய கட்சியில் சாதாரண தொண்டனும் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய முடியும்.

    எங்களுடைய கட்சியில் வேட்பாளர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 15 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். அந்த 15 பேரில் நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். திமுகவில் கனிமொழி மட்டுமே விருப்பமனு செய்திருந்தார்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    • தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது.
    • அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான்.

    சென்னை:

    தேர்தல் களத்தில் பிரசார அனல் வீசினாலும் அவ்வப்போது பெரிய தலைவர்களின் பேச்சுக்கள் சிரிப்பு, சிந்தனை, நையாண்டியோடு வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் அவர்கள் நயமாக பேசுவது தென்றலாக வந்து செல்லும்.

    அப்படித்தான் தி.மு.க.வின் மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகனின் பேச்சும் தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். வழக்கம் போலவே தனது நகைச்சுவை கலந்த பேச்சை மலரும் நினைவுகளோடு பேசினார். அவர் பேசியதாவது:-

    உனக்கு ரொம்ப அதிர்ஷ்டம். உன் பெயர் தமிழச்சி. எதிர்த்து போட்டியிடுபவர் தமிழிசை. கொஞ்சம் மாறினால் வேறு ராகத்துக்கு போய் விடும். ஜாக்கிரதையாக பேச வேண்டும். இப்போது என்னண்ணா அந்த அம்மாவும் (தமிழிசையும்) எனக்கு வேண்டியவர்தான்.

    என் வீட்டின் பின்னால்தான் குமரிஅனந்தன் குடியிருந்தார். தமிழிசை குழந்தையாக இருந்த போது கவுன் போட்டு கொண்டு வீட்டின் முன் விளையாடும். இப்போ அது தலைவராகி, கவர்னராகி விட்டது.


    ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் என்னை முதலில் பேச விட்டு அவரை பேசவைத்தனர். அதை பார்த்ததும் அவரை அழைத்து சிரித்துக் கொண்டே நீயெல்லாம் தலைவர் என்றேன். அதையும் பேசும் போது அப்படியே சொல்லிவிட்டார்.

    தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது. இல்லை என்றால் கவர்னர் பதவியை விட்டு விட்டு வருமா? ஒரு மாநிலத்துக்கு அல்ல. இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தவர். ஒரு வேலையும் கிடையாது. காலை எழுந்து சாப்பிட்டு விட்டு ஒரு பைல் வந்தால் கையெழுத்து போட வேண்டியது. அதன் பிறகு நிம்மதியாக இருக்கலாம்.

    இப்போ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது. எனக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போன் போட்டு வேண்டாம்மானு சொல்லி இருப்பேன்.

    அதிலும் தென்சென்னனக்கு வரலாமா? தமிழச்சி பாராளுமன்றத்துக்கு தகுதியானவர். தமிழச்சி ஆங்கிலத்தில் புலமை பெற்று பேராசிரியையாக இருந்தார். அவர் பேசியபோது சபையே அதிர்ந்து போனது என்றார்.

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு டாக்டர் தமிழிசையும் தனது பாணியில் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    அண்ணன் துரைமுருகன் அவர்களே உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் தனி என்பது தமிழிசைக்கும் புரியும்.


    உங்கள் வீட்டு முன்பு கவுன் போட்டுக் கொண்டு நானும், உங்கள் மகன் தம்பி கதிர்ஆனந்த், அண்ணன் ரகுமான்கான் மகன் தம்பி சுபீர் எல்லாம் விளையாடி கொண்டிருப்பதும் அப்போது நாங்கள் உங்களை பார்த்ததும் நீங்கள் எங்களை சிரிக்க வைத்து மகிழ்வதும் மறக்க முடியாத மலரும் நினைவுகள்தான்.

    நீங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை நான். கட்சிக்காக எனக்கு எதிராக நீங்கள் பேசினாலும் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்மனதில் இருக்கும். உங்கள் உதடுகள் பேசினாலும் உள்ளம் பேசாது.

    அண்ணன் அவர்களே, நீங்களே கூறி விட்டீர்கள் கவர்னர் பதவி எவ்வளவு சொகுசானது என்று. அப்படிப்பட்ட சொகுசான, கவுரவமான பதவியையே வேண்டாம் என்று நான் குடியிருக்கும் தென் சென்னையில் போட்டியிடுகிறேன் என்றால் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை சொகுசான பதவி நிறைவேற்றி வைக்காது. மக்களோடு இருந்து நேரடியாக மக்களுக்கு சேவை செய்யும் ஆசையில் வந்திருக்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களை நினைத்து சநதோசப்படுகிறேன். நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். உங்களுக்கும் குரு பெயர்ச்சி மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்கிறேன்.

    எனக்கு பெயர்ச்சிகள் சாதகமாகவே இருந்து வருகின்றன. கட்சி தலைவராகவும், கவர்னராகவும் பெயர்ச்சி நடந்தது. இப்போது பாராளுமன்றத்தை நோக்கி பெயர்கிறது.

    அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான். ஆனால் கொஞ்சம் அகங்காரத்தோடு பேசுகிறீர்கள். பெயரில் தமிழச்சி, நீங்களெல்லாம் முழுங்குவதும் தமிழ் தமிழ் என்றுதான். ஆனால் தமிழச்சி பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பிய்த்து உதறி விட்டார் என்று பெருமை பேசுகிறீர்கள்.

    உங்கள் தமிழ் பேச்சு இவ்வளவு தானா? ஊருக்கு தான் உபதேசமா? பாராளுமன்றத்தில் தாய்மொழி தமிழில் பேசும் உரிமையை குமரிஅனந்தன் எப்போதோ பெற்று தந்து விட்டாரே. ஆங்கில புலமை பெற்றிருந்தும் தமிழில் பேசி அதிர வைத்தார். அவரது போராட்ட வெற்றியை கலைஞரும் பாராட்டினார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

    நான் இரு மாநிலங்களிலும் தமிழில்தான் பதவி பிரமாணம் எடுத்து கொண்டேன். தமிழ் மீது அக்கறை இருந்தால் கன்னிப் பேச்சை அன்னை தமிழில் அல்லவா பேச செய்து இருக்க வேண்டும்.

    தமிழ் மொழியில் பேசுவதையே அவமானமாக கருதுகிறார்கள் தி.மு.க. எம்.பி.க்கள். ஆனால் என் தாய்மொழியாக தமிழ் இல்லாமல் போய் விட்டதே என்று பிரதமர் மோடி ஆதங்கப்படுகிறார். தாய் மொழியில் பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை கூட விட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள்.

    பேசி பேசியே மக்களை மயக்கியவர்கள் நீங்கள். மக்கள் மயக்கம் தெளிந்து விட்டார்கள். உண்மையை உணர்ந்து கொண்டார்கள். சூரியன் உதித்தாலும் சரி, உதிக்காவிட்டாலும் சரி. தாமரை மலரும் காலம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×