search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCB"

    • ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.
    • முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

    ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெற வேண்டிய நிலையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் பேட்டிங் செய்த சிஎஸ்கே வெற்றி பெற 219 ரன்கள் இலக்காக இருந்தாலும், 201 ரன்கள் எடுத்தாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் விளையாடினர்.

    கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தை டோனி சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த பந்து ஸ்டேடியத்தை தாண்டி வெளியே சென்றதால், புதிய பந்து வழங்கப்பட்டது. அது பவுலிங்கிற்கு நன்றாக கைகொடுத்தால், அடுத்த பாலில் டோனி ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ரவிந்திர ஜடேஜாவால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை.

    அத்துடன் சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஆர்சிபிக்காக கடைசி ஓவரை வீசிய யஷ் தயாள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். முதல் பந்தை டோனி சிக்சர் அடித்த பின்னர், அவர் பொறுமையாக மீதமுள்ள 5 பந்துகளையும் வீசிய விதம் பாராட்டை பெற்றது.

    இதே யஷ் தயாள் தான், கடந்த முறை குஜராத் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். பின்னர் அவர் குஜராத் அணியால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை ரூ. 5 கோடி கொடுத்து ஆர்சிபி 2024 சீசனுக்காக வாங்கியது.

    இந்நிலையில் தனது மகனின் மோசமான ஆட்டத்திற்காக முன்பு கேலி செய்தவர்கள், சென்னை அணியுடனான வெற்றிக்கு பின்னர் பாராட்டு தெரிவிப்பதாக, ஆர்சிபி பவுலர் யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    யஷ் தயாள் குறித்து அவரது தந்தை கூறியதாவது-

    ஆர்சிபி யஷ் தயாளை ரூ.5 கோடிக்கு வாங்கியபோது, ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எல்லோரும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு நிறைய நல்ல செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன.

    முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். கடவுளே, இன்று என் குழந்தைக்கு ஆதரவளிக்கவும், இது மீண்டும் நடக்கக்கூடாது என்று பிரார்த்தித்தேன்.

    முதல் பந்திற்குப் பிறகு எனது மகன் பொறுமையைக் கடைப்பிடித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. முன்பு கேலி செய்தவர்கள் இன்று என் மகனை பாராட்டுகிறார்கள்.

    என்று அவர் கூறினார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.
    • இதனை தொடர்ந்து டோனி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்திற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
    • ஆனால் கடைந்து ஐந்து போட்டிகளில் மழைக்காரணமாக ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.

    ஐபிஎல் 2024 சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. லீக் போட்டிகளின் கடைசி கட்டங்கள் வரை எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டே இருந்தது.

    இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுகின்றன. ஒவ்வொரு அணியும் முதல் இடங்களை பிடிக்க விரும்பும். ஏனென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒருமுறை தோல்வியடைந்தால் மறுமுறை மோத வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தத் தொடரில் முதலில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை உறுதி செய்யும் என்ற நிலையில் இருந்தது. கைவசம் 5 போட்டிகள் இருந்ததால் எப்படியும் முதல் இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணிக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியாக நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-வது இடத்திற்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

    நாளை செவ்வாய்க்கிழமை (21-ந்தேதி) பிளேஆஃப் சுற்றுகள் தொடங்குகின்றன. நாளை நடைபெறும் குவாலிபையர்-1ல் முதல் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

     இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி குவாலிபையர்-2ல் விளையாட வேண்டும். இது 24-ந்தேதி நடக்கிறது.

    22-ந்தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் 3-வது இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்- 4-வது இடம் பிடித்த ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும்.

    வெற்றி பெற்ற அணி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குவாலிபையர்-2ல் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.

    ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

    இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என ஒலிக்கும் குரல்கள்

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்த பதிவுகளே சமூக வலைத்தளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதே தற்போது நடந்துவரும் விவாதங்களுக்குக் காரணம்.

    ஆர்சிபி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்ததால் கை கொடுக்க சென்ற டோனி சட்டென திரும்பி டிரஸிங் அறைக்குச் சென்ற வீடியோ தீயாக பரவி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என்று அவருக்கு ஆதரவான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் அணிகள் குறித்தும் தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், சில காலத்துக்கு முன் பேசிய பழைய வீடியோ ஒன்றில், சிஎஸ் கே அணி 5 முறை ஐபிஎல் வென்றிருந்தாலும் தாங்கள் பெரியவர்கள் என்ற ஆட்டிட்யூடான மனநிலை அவர்களிடம் இருக்காது.

    ஆனால் விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஒரு லீக் போட்டி வென்றாலும், பிளே ஆப்பிற்கு தகுதிபெற்றாலும் கூட தாங்கள் கோப்பையை வென்றதுபோல் நடந்துகொவர்கள் என்று பேசியிருந்தார். அதுவே இந்த மேட்சிலும் நடந்துள்ளதாக இந்த வீடியோவை நெட்டிஸின்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. 

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி நேற்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    இதையடுத்து, நேற்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முன்னே நின்றிருந்த எம்.எஸ். டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.

    களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். எம்.எஸ். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், எம்.எஸ். டோனி சென்ற பிறகு பெங்களூரு அணியின் விராட் கோலி செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, சென்னை வீரர்களிடம் கை குலுக்கிய விராட் கோலி, எம்.எஸ். டோனியை தேடிக் கொண்டு டிரெசிங் ரூம் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

    • நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    • பொதுவாக தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்க சென்றனர்.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது. அதன்பின் பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி, 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் தோற்றது. இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    பொதுவாக தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்க சென்றனர்.ஆனால் ஆர்சிபி அணியினர் வெற்றிக் கழிப்பில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி சட்டென திரும்பி மைதானத்தை விட்டு வெளியேறி டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றார்.

    டோனிகை கொடுக்காமல் வெளியேறிய வீடியோவே தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. டோனிக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் . இதற்கிடையே கிரிக்கட் பிரபலங்களும் டோனியின் செயல் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

     

    அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரரும் வர்ணனையாளருமான மைக்கல் வாகன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வது எப்படி என்று டோனி, விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் ஆட்டத்தில் கை கொடுப்பது சிறந்த மாண்பாகும். இதுவே விராட் கோலி கை கொடுக்காமல் சென்றிருந்தால் அவரை ஈகோ பிடித்தவர் என்று பலர் விமர்சிக்கத் தொடங்கியிருப்பர்.

    எனினும் ஆர்சிபி வீரர்களும் தோனிக்கு மரியாதை அளித்து அவர் வந்த பொழுது கைகொடுக்க வந்துருக்க வேண்டும், அப்படி செய்யாமல் அவர்களுக்குளேயே கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    மைதானத்தில் வெற்றிக் களிப்பில் கோலி உள்ளிட்ட ஆர்சிபி அணியனர் கொண்டாடித் தீர்த்தனர். இதனிடையே தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கைகொடுக்கும் வழக்கப்படி டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்ற நிலையில் ஆர்சிபி அணியினர் தங்களது கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததால் தோனி அவர்களுக்கு கை கொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்றார்.


     

    இருப்பினும் பிற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி அணியினருடன் கைகுலுக்கினர். இந்நிலையில் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தோனியின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    • நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். விராட் கோலியும் உற்சாகத்தில் இருந்தார். அவர் முகத்தில் புன்னகையுடன் கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவதைக் காண முடிந்தது. கோலி மட்டுமல்ல, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தனது கணவரின் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதைக் கண்டு மிகுந்த உணர்ச்சிவசத்தில் இருந்தார்.

    இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.


    • 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 54 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ருதுராஜ் கோல்டன் டக் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் 4 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ரச்சின் மற்றும் ரகானே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    அதிரடியாக விளையாடிய ரகானே 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே 7 ரன்னிலும் ரச்சின் 61 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து டோனி மற்றும் ஜடேஜா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 12 பந்தில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 6 பந்துக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சரை பறக்க விட்ட டோனி 2-வது பந்தில் அவுட் ஆனார்.

    இறுதியில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    • சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது.
    • இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. லஞ்சத்தை எதிர்த்து போராடும் சுதந்திர போராட்ட தியாகி என்ற ஒன் லைனர் சேனாபதி கதாபாத்திரத்தில் கமலின் தனித்துவமான நடிப்பில் மெருகேறியிருக்கும். இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் ஜூலை 12 ஆம் தேதி மொஹரம் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    முன்னதாக ஜூன் மாதமே படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் 1 மாதம் தாமதமாக படம் வெளியாவது ரசிகர்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில் ரசிகர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில், படத்தைக் குறித்த மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியன் 2 டிரைலர் விரைவில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்படும் என்றும் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கான டிரைலரும் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்தியன் 2 படத்தின் கதை மிக நீளமாக சென்றதால் படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவெடுக்கப்பட்டு அதன்படி, இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே படத்தின் ரிலீஸும் தாமதமாகியுள்ளதாக தெரிகிறது. எது எப்படியாக இருந்தாலும் சேனாபதியை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

    இதற்கிடையே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ஆரசிபி மோதும் மேட்ச் இன்று (மே 18) மாலை சின்னச்சாமி அரங்கில் நடைபெற உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் லைவில் மாலை 6மணியளவில் இயக்குனர் சங்கரும், கமல்ஹாசனும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×