என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ரியல்மி பட் ஏர் 3
ஒரே நேரத்தில் 2 சாதனங்களில் இணைக்கலாம்... ரியல்மி வெளியிடும் பட்ஸ் ஏர் 3 இயர்போன்
இந்த இயர்போன்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை டோட்டல் பிளே பேக் வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போன்களை வரும் ஏப்ரல் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த இயர்போனில் TUV Rheinland சான்றிதழ் வழங்கப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற இரைச்சலை 42 db வரை குறைக்கும். மேலும் இதில் இரண்டு மைக்ரோபோன்கள், 10mm டயனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இயர்போன்களை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் இணைத்துகொள்ளலாம். இந்த இயர்போனில் உள்ள IPX5 வியர்வை மற்றும் நீரினால் இயர்போன் பாதிக்கப்படாமல் காக்கிறது. மேலும் இந்த இயர்போன்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை டோட்டல் பிளே பேக் வழங்கப்படுகிறது. மேலும் வெறும் 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளே பேக் டைமும் வழங்கப்படுகிறது.
இந்த இயர்பட்டில் டிராஸ்பரன்ஸி மோடும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.5000-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story