search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் சாஹு"

    • சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • மீட்புப் பணியில் தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

    இதுகுறித்து தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது வரை சிறுவனுக்கு சுயநினைவு உள்ளது. ஆழ்துளை கிணற்றில் சேரும் நீரை அள்ளித் தருகிறான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குஜராத்தில் இருந்து மீட்பு ரோபோ வந்துள்ளது. மதியத்துக்கு மேல் சிறுவன் மீட்கப்படலாம் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×