search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிள் பறிமுதல்"

    அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பாரதி தெருவில் நேற்று இரவு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருப்பதாகவும், அந்த வாலிபர்களிடம் சிலர் ரகசியமாக ஏதோ பொருட்கள் வாங்கி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களது சட்டை பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் கோரிமேடு வீமன் நகரை சேர்ந்த அருண் (வயது 29), நைனார் மண்டபம் புதுவை - கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்த ரபீஷ் (22) மற்றும் முத்துப்பிள்ளை பாளையம் விமல் (23) என்பதும் இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை பணம் ரூ.9 ஆயிரம், 5 செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×