search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்காணத்தில் இளம்பெண் மர்மமரணம்"

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஏந்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). புதுவையில் உள்ள ஜிம்பர் ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பவித்ரா (22).

    சுரேசுக்கும் பவித்திராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு. அது நாளடைவில் காதலாக மாறியது. அதை தொடர்ந்து அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்த தம்பதிக்கு பிரித்திகா, பவித்ரா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அடிக்கடி கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை 5.30 மணியளவில் பவித்திராவின் தந்தை ரத்தின சபாபதிக்கு சுரேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பவித்ரா பிரம்மதேசம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுளார் என்றார்.

    ஆஸ்பத்திரிக்கு ரத்தினசபாபதி விரைந்து சென்றார். அங்கு மகள் பவித்ரா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகள் இறந்ததை கேட்ட தந்தை கதறி அழுதார்.

    சாவில் சந்தேகம் அடைந்த ரத்தினசபாபதி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை அடுத்து இன்ஸ்பெக்டர் கலைமணி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ரா உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவித்ரா அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவித்ராவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆவதால். ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×