search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விழிப்புணர்வ"

    • எதிரே வரும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், ஒலி எழுப்ப வேண்டும் என டிரைவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறினர்.
    • சுற்றுலா வாகன டிரைவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாா்களா? என்பது குறித்து, பிரீத் அனலைசர் கருவி மூலமும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

    ஊட்டி:

    தென்காசியில் இருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு வந்த ஒரு சுற்றுலா பஸ் குன்னூா் மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார். இதன்படி குன்னூா் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரவி, உதவி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அடங்கிய குழுவினர், நேற்று அங்கு உள்ள பஸ் நிலையம், ஆம்னி பஸ்-டாக்சி நிறுத்தம் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்றனர்.

    அப்போது அவர்கள் மலைப்பாதைக்கு வந்திருந்த சுற்றுலா வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது, பிரேக் டிரம் சூடாகி இருந்தால் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்லவேண்டும்.

    மலைப்பாதையில் உள்ள கொண்டைஊசி வளைவுகளில் மிகவும் மெதுவாக வாகனங்கள் செல்ல வேண்டும். எதிரே வரும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், ஒலி எழுப்ப வேண்டும் என டிரைவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறினர்.

    மேலும் சுற்றுலா வாகன டிரைவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாா்களா? என்பது குறித்து, பிரீத் அனலைசர் கருவி மூலமும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

    இதுதவிர மோட்டார் சைக்கிளில் வேகமாக வருபவா்களை தடுத்து நிறுத்தி, மெதுவாக. கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினா். சுற்றுலா வாகனங்களுக்கான விழிப்புணா்வு பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ×