search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து"

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தவளமலை பகுதியில் 30 அடி பள்ளத்தில் கர்நாடக அரசு பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். #NilgirisBusAccident

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியி இருந்து மைசூரு நகரை நோக்கி கர்நாடக அரசு பேருந்து ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கூடலூர் அருகே தவளமலை பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

    30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #NilgirisBusAccident
    ×