search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாரம்"

    நாட்டுச்சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாட்டுச்சோளத்தில் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுச்சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - கால் கப்
    உளுந்து - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    ப.மிளகாய் - 3

    தாளிக்க

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி அரிசி, சோளம், உளுந்து மூன்றையும் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு உப்பு, நீர் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து மூன்று மணிநேரம் புளிக்க விடவும்.

    வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வதக்கியவற்றையும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கொட்டி நன்கு கலக்கி குழிப்பணியார சட்டியில் ஊற்றி சுட்டெடுக்கவும்.

    சுவையான நாட்டுச்சோள குழிப்பணியாரம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் உணவில் கம்பை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கம்பு, சோம்பு கீரையை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு மாவு - 1 கப்
    சோம்பு கீரை (Dill leaves) - அரை கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - தேவைக்கு ஏற்ப
    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி



    செய்முறை

    சோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, நறுக்கிய சோம்பு கீரை,வெங்காயம், ப.மிளகாய், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சிறிய எண்ணெய் ஊற்றி மாவை பணியாரங்களாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான கம்பு - சோம்பு கீரை பணியாரம் ரெடி.

    இதனை தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலையில் இந்த தேங்காய் பால் பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - அரை கப்
    உளுந்து - அரை கப்,
    தேங்காய் - ஒன்று,
    பால் - ஒரு டம்ளர்,
    ஏலக்காய் - சிறிதளவு
    சர்க்கரை - கால் கப்



    செய்முறை

    உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

    தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

    அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.

    நல்ல பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

    குழந்தைகள் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×