search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி"

    • பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான்.
    • டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த பழைய கன்னிவாடி கே. குரும்பபட்டியை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு சிறுவனின் கால் கட்டை விரலில் கடித்தது. இதனால் சிறுவன் கூச்சலிட்டான். மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை செல்வம் 4 அடியில் நல்லபாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அந்த பாம்பை அடித்து கையோடு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மகனுடன் சிகிச்சைக்கு வந்தார். இதனை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சிறுவன் தர்மராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகனை கடித்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு ராபிக் குழந்தைகளுக்கு பால் கலந்து கொடுத்துள்ளார்.
    • கால், மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு சுடுநீரில் மெக்னீசியம் சல்பேட்டை கலந்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி வந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4) மற்றும் 10 மாத கைக்குழந்தை பாத்திமா ஆகியோர் உள்ளனர். இவர்களது உறவினரான நத்தம் அம்மா பட்டியைச் சேர்ந்த புரோஸ்கான் குழந்தைகளான முகமது சுகைல் (11), முகமது சுனைல் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    தற்போது விடுமுறை என்பதால் அவர்கள் இருவரும் ஷேக் அப்துல்லா வீட்டுக்கு வந்தனர். நேற்று இரவு ராபிக் குழந்தைகளுக்கு பால் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த 4 குழந்தைகளும் அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாலை சோதனை செய்துள்ளார். அப்போது சர்க்கரைக்கு பதிலாக மெக்சீனியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை கலந்து கொடுத்தது தெரிய வந்தது.

    கால், மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு சுடுநீரில் மெக்னீசியம் சல்பேட்டை கலந்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி வந்துள்ளது. இதற்காக கற்கண்டு போன்ற வடிவம் கொண்ட மெக்னீசியம் சல்பேட்டை சமையல் அறையில் சேக் அப்துல்லா வைத்துள்ளார். அதனை கவனிக்காமல் பாலில் கலந்து கொடுத்ததால் குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

    4 குழந்தைகளுக்கும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×