search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி"

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதுபோல் இருப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அதை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ண வள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தும், இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர், அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

    ×