search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச டென்னிஸ் தரவரிசை"

    • டென்னிஸ் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று.
    • நீண்ட காலம் இச்சாதனை நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன்.

    துரின்:

    தரவரிசையில் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3. 6-3 என்ற நேர் செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் யானிக் சின்னெரை (இத்தாலி) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். லீக்கில் அவரிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டார்.

    இந்த பட்டத்தை ஜோகோவிச் ருசிப்பது இது 7-வது முறையாகும். இதற்கு முன்பு 2008, 2012, 2013, 2014, 2015, 2022 ஆகிய ஆண்டுகளிலும் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் இந்த பட்டத்தை இதற்கு முன்பு அதிக முறை வென்றிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (6 தடவை) சாதனையை முறியடித்தார்.

    போட்டி கட்டணம் உள்பட மொத்தம் ரூ.36¾ கோடியை ஜோகோவிச் பரிசுத்தொகையாக அள்ளினார். 2-வது இடத்தை பிடித்த சின்னெருக்கு ரூ.21½ கோடி கிடைத்தது.

    இதன் பின்னர் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. முதலிடத்தை ஜோகோவிச் ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டார். 2012-ம் ஆண்டில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரிணையில் ஏறிய ஜோகோவிச், அதன் பிறகு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார். தற்போது செப்டம்பர் 11-ந்தேதியில் இருந்து முதலிடத்தில் தொடருகிறார்.

    இது அவர் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் 400-வது வாரமாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் இவர் தான். இந்த சாதனை பட்டியலில் ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 377 வாரங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

    36 வயதான ஜோகோவிச் கூறுகையில், '400 வாரங்கள் முதலிடம் என்பது மிகப்பெரிய சாதனை. டென்னிஸ் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று. என்றாலும் அடுத்து வேறு எந்த வீரராவது இந்த சாதனையை முறியடிப்பார்கள். ஆனால் நீண்ட காலம் இச்சாதனை நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    ×