search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பர் வயர் திருட்டு"

    என்எல்சி சுரங்கத்தில் காப்பர் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி.நிறுவனம் 2-வது சுரங்கபகுதியில் நேற்று மாலை 2 பேர் சாக்குமூட்டையுடன் சுற்றித் திரிந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புபடை வீரர் அழகர்சாமி அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தார். அவர்கள் வைத்திருந்த சாக்குபையை பிரித்து பார்த்தபோது காப்பர் வயர் திருடி வைத்து இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள் வடலூர் பார்வதிபுரததை சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 51), சஞ்சை (28) ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ×