search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு"

    பிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். #France #WarMemorial #VenkaiahNaidu
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகரில் பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரான்ஸ் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி உஷாவும் சென்றுள்ளார்.

    முதலாம் உலகப் போர் முடிந்து நூறு வருடம் நிறைவடைந்ததை நினைவு கூரவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மெக்ரான் தலைமை தாங்குகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.



    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் கட்டப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முதலாம் உலக போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய படைவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் என தெரிவித்தார்.
     
    முன்னதாக, பிரான்ஸ்வாழ் இந்திய மக்களை சந்தித்து வெங்கையா நாயுடு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #France #WarMemorial #VenkaiahNaidu
    ×