என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆந்திரா போலீஸ்"
- இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார் தொடங்கி உள்ளனர்.
- பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்திக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார் தொடங்கி உள்ளனர்.
இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வேலை உள்ளிட்ட காரணங்களால் தனியாக பயணம் செய்யும் பெண்களை பாதுகாப்பாக போலீசார் வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவார்கள்.
இரவு நேரங்களில் 100, 112, 29 51 75 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு போன் செய்தால் போதும், சம்பவ இடத்திற்கு பெண் காவலர்கள் பைக்கில் வருவார்கள்.
சம்பந்தப்பட்ட பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள்.
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பணிபுரிய உள்ள பெண் போலீசாருக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்திக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்