search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய குத்துச்சண்டை போட்டி"

    • இறுதிப் போட்டியில் கீழே விழுந்ததால் காயமடைந்து வெளியேறினார்.
    • உஸ்பெகிஸ்தான் வீரர் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிப்பு.

    அம்மான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப்பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சிவ தாபா, உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துல்லா ரஸ்லனை எதிர்கொண்டார். 2-வது ரவுண்டில் அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு சிவ தாபாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி அதிகம் இருந்ததால் போட்டியில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அப்துல்லா ரஸ்லன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் இருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் சிவ தாபாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    ×