search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல் ஷபாப்"

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Mogadishubombing #carbombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

    டப்க்கா என்னுமிடத்தில் வபாரி காலல் நிலையம் அருகே நடந்த இந்த தாக்குதலில் அந்த சாலை வழியாக சென்ற பல வாகனங்கள் சேதமடைந்தும், உருக்குலைந்தும் கிடக்கும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #Mogadishubombing  #carbombing
    சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #carbombing #Mogadishucarbombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

    அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அலுவலகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் தொழிலாளர் நலத்துறை துணை மந்திரி சக்கர் இபுராஹிம் அப்தல்லா உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 

    பலத்த காயங்களுடன் பத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இன்றைய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #carbombing #Mogadishucarbombing
    சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 30 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். #Somaliakills #alShabab #Somaliamilitants
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்காவை சேர்ந்த அதிரடிப் படையினரும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், சோமாலியாவின் தென்பகுதியில் மத்திய ஜுபா அருகேயுள்ள ஜிலிப் நகரில் இன்று சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்த 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு சொந்தமான முகாமை ராணுவ சிறப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்கியதாகவும், இதில் சிரியா, லிபியா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. #Somaliakills #alShabab #Somaliamilitants
    ×