என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "winning students"

    • பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
    • புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினர்களாக பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி, பேரவை அமைப்பாளரும் கவியரசு கண்ணதாசன் மற்றும் இலக்கிய கழக நிறுவனரும், தீந்தமிழ் தென்றல், வக்கீல் கோவிந்தராசு ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    இதில் சிறப்பு விருந் தினராக டாக்டர் ரத்தினவேல் காமராஜ் கலந்துகொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச் சிகளை கண்டு களித்தார். புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கள் செய்திருந்தனர்.

    • ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடந்தது.

    புதுச்சேரி:

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் அசோடிகா அமிர்த் மகோத்சவம் (சுதந்திர தேன் விழா) சார்பில் பள்ளி மாண வர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினரா க செல்வகணபதி எம். பி., சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிர்வாக அதிகாரிகள் அரவிந்த்குமார், அரவிந்த் நாத்ஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 25 மாணவ-மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொது மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×