search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram govt hospital"

    விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் காலில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவருக்கு காவலாளி சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கே.கே. ரோடு மணிநகரை சேர்ந்த வர் ஜீவா (வயது 32). ஆட்டோ டிரைவர்.

    இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சைலன்சரில் எதிர்பாராத விதமாக காலை வைத்தார். இதில் ஜீவாவுக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக தனது உறவினரை அழைத்து கொண்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அப்போது டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இருந்தனர். ஆனால் அவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறைக்கு ஜீவாவை அழைத்து சென்றார். பின்னர் காலில் ஏற்பட்ட தீக்காயத்துக்கு மருந்து வைத்து கட்டு போட்டார். இதை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    காலில் தீக்காயம் அடைந்தவருக்கு காவலாளி சிகிச்சை அளித்த காட்சி வாட்ஸ்-அப் மூலம் பரவி உள்ளது. காவலாளி மீது ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
    ×