என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village girl"

    • சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருபவர் புபேஷ் குப்தா.
    • வன ஆர்வலரான இவர் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்துள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிராமத்தில்

    சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருபவர் புபேஷ் குப்தா. வன ஆர்வலரான இவர் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். காடுகள் வளர்ப்பிற்காகவும் தமிழ் பாரம்பரிய மரக்கன்றுகளை வளர்கிறார்.

    கொய்யா, பலா, சீத்தா, தேக்கு, சந்தனம், புளியம், மகிழம், வாகை என இங்கு உருவாக்கும் மரக்கன்றுகள் நீர்நிலைகளை சுற்றி நடப்படுகிறது.இந்த மரக்கன்றுகளை சுற்றியுள்ள கிராமத்து பெண்களே உருவாக்கி வருகின்றனர்.

    அப்போது அவர்கள் வேலை பளு தெரியாமல் இருக்க பாட்டு பாடுவது வழக்கம்.அந்த வகையில் அழகம்மா என்பவர் ஏழ்மை, விவசாயம், கிராமத்து சூழல் ஆகியவற்றை 25 வார்த்தைக்குள் அடக்கி பாடியுள்ளார்.

    "நாலடி சதுரத்தில் நடுவு செய்யும் குட்ட பொண்ணு. நானும் கொஞ்ச ஏழையம்மா நடவை போடு கிட்ட கொஞ்சம். குட்ட பொண்ணு நட்ட நாத்து சுழலுதம்மா நெல் கதிரு. ரோட்டோரம் ஊட்டு காரி ரோஜாப்பூ கொண்டகாரி."

    இந்த தெம்மாங்கு பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

    ×