என் மலர்
நீங்கள் தேடியது "Tirukamiswarar temple"
- புதுவை அரசு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- தினமும் 200 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதன் தொடக்க விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
அறக்கட்டளை நிர்வாகிகள் ஜாவர், பாரத் ஜாவர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அன்னதானம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்து அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, திருக்கா மீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தினமும் 200 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.
- 22-ந் தேதி தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்வசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 20-ந் தேதி காலை 8.15 மணிக்கு நடக்கிறது.
மறுநாள் 21-ந் தேதி தீர்த்தவாரி, வளையல் உற்சவம், 22-ந் தேதி தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்வசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
நாள்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






