என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Think Council insists"

    • சிந்தனையாளர் பேரவையின் 118-வது சிந்தனை அரங்கம் புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
    • புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழு அதிகாரம் கொண்ட தனி மாநில அந்தஸ்தை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    சிந்தனையாளர் பேரவையின் 118-வது சிந்தனை அரங்கம் புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் காமராசு வரவேற்றார். சுசீலா, துணை செயலாளர்கள் ராஜாராம், விசாலாட்சி, முன்னாள் செயலாளர் குமாரகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் திருபுவனை கலியபெருமாள் கவிஞரின் கடமைகள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். புதுவை ஸ்டேட் வங்கி ஜிப்மர் கிளை மேலாளர் ராஜசேகரன் சிந்தனை அரங்க உரையாற்றினார்.

    தொடர்ந்து கலந்து ரையாடல் மற்றும் கவிஞர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறை வேற்றபட்டது.

    புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழு அதிகாரம் கொண்ட தனி மாநில அந்தஸ்தை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு வழங்க வேண்டும். புதுவை அரசின் கலைபண்பாட்டு துறையால் வழங்கப்படும் கலைமாமணி மற்றும் தமிழ்மாமணி விருதுகளை தகுதியுடையோருக்கு வருகிற திருவள்ளுவர் தினத்தில் வழங்கவேணடும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. முடிவில் பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    ×